கார்த்திகை திங்களில் அவதரித்த முத்தமிழ் சங்க தலைமகன்…!
மக்களையும் மந்தைகளையும்
மக்கள்
உரிமைகளையும் உடைமைகளையும்
தமிழ்
பண்பாட்டையும் பாரம்பரியத்தையும்
நம்
தாயையும் தாய்மண்ணையும்
பாதுகாக்க பிறந்தவன் நீ…
வெட்சி சூடிய
வேங்கை நீ…..
வேனிற் பாசறையையும்
கூதிர் பாசறையையும்
அரண்மனையாக கொண்ட
முல்லை நிலத்து பிள்ளை நீ…
எதிரிகளையும் எத்தர்களையும்
பச்சை
துரோகிகளையும் துரியோதனர்களையும்
இன
படுகொளையாலர்களையும் கொள்ளையர்களையும்
பெரும்
பேரினவாதத்தையும் அதிகாரவர்க்கத்தையும்
வேரறுக்க வந்தவன் நீ
உழிஞ்சை சூடிய
உத்தமன் நீ…
தோட்டாக்களையும் பீரங்கிகளையும்
அலற வைத்த
மருத நிலத்து மன்னன் நீ..
வல்லாதிக்கத்தையும் வஞ்சகத்தையும்
உலக
சர்வாதிகாரத்தையும் சதிகாரர்களையும்
விஷ
அணுகுண்டுகளையும் அரக்கர்களையும்
நர
மனிதர்களையும் நயவஞ்சகர்களையும்
உருக்குலைக்க வந்தவன் நீ
உயிரைவிட
உரிமையை உயிராய் கொண்டவன் நீ
துன்பம் உன்னை துரத்தியபொழுதும்
தும்பை பூவை தோளில்சூடி
நெய்தல் நிலத்தை காத்தவன் நீ…
மூன்று நிலத்தையும் காத்தவனே
முக்கனிச் சாராய் இனித்தவனே
முத்தமிழ் சங்க தமிழ்மகனே
மூத்த குடியில் பிறந்தவனே…
உன் புகழ் உலகம் அறிந்திடவே
உன்னை வாழ்த்தி பாடிடவே
பாடான்திணைகள் பலருண்டு
அதிலே ஒருவன் நானுண்டு….
ஓயா நின்புகழ் பாடிடுவேன்
உலகமறிய செய்திடுவேன்
ஒப்பில்லாத தமிழ் தலைவன்
நீதான் என்றே உரைத்திடுவேன் ….