காண்டீபம் கை நழுவ கரும்புலிகள் விடுவதில்லை
களம் நூறு கண்டாலும்
கல்லறைக்குள் தாழ்ந்தாலும்
இனம் வற்றிப் போனாலும்
சனம் நூறு செத்தாலும்
சா வந்து எம்மவரை
சாக்காட்டி போட்டாலும்
குலம் காக்க வந்த எங்கள்
குல சாமி விழுவதில்லை
மரணத்து ஓலங்கள்
மண்ணிடையே எழுந்தாலும்
ரணத்துடைய காயங்கள்
கை காலில் வந்தாலும்
சோர்வு நிலை தான் வந்து
உடல் வற்றிப் போனாலும்
சொந்த மண் பாசமது
மனம் விட்டு போவதில்லை
மாரி மழை பொழிந்து
மண் மேடு ஆனாலும்
நூறு குளம் வற்றி
கோடை வெயில் வந்தாலும்
பாடை ஏறி நாங்கள்
பரலோகம் போனாலும்
அடுத்த தலைமுறையின்
அடிமை நிலை விரும்பவில்லை
கந்தகம் உடல் ஏறி
கடல் வெடியாய் ஆனாலும்
காரிருள் பகை கலைத்து
உடல் சிதறி போனாலும்
காந்தள் மலர்க் காலை
வெடி நெருப்பாய் ஆனாலும்
காண்டீபம் கை நழுவ
கரும்புலிகள் விடுவதில்லை.
……கவிப்புயல் சரண்…..