காக்க மறந்தது ஏனோ..
உன்னையே தஞ்சமென இருந்தோம்
உன்னுடனே தினமும் எம் பொழுதுகள்
உனக்குள்ளே தானே எமது வாழ்வுகள்
உனக்குள் அவ்வளவு நெருக்கங்கள்
அனு தினமும் ஓட்டி உறவாடினோம்
அல்லும் பகலும் சரணடைந்தோம்
கரையதில் ஓடியும் விளையாடினோம்
அலையுடனே கொஞ்சியும் குலாவினோம்
காதலுடன் காத்திருந்த பொழுதுகள்
காதலோடு உனை நாடிவந்த வேளைகள்
களிப்புற்று இன்புற்றிருந்த சில கணங்கள்
தனிமையிலும் வாடிய மாலை வேளைகள்
எம் சுமைகளையும் உன்னில் கரைத்தோம்
எம் சுகங்களையைம் உனக்கே தந்தோம்
அத்தனையும் உனக்கே அர்ப்பணித்தோம்
ஆனால் எம்மை காத்திட மறந்தது ஏனோ!
சொல்லு கடலையே! உன் வாய் திறந்து,
திருவாயும் திறவாயோ! சோகம் தீராயோ,
உறவுகள் எங்கேயோ! நீயும் கூறாயோ,
கடலன்னையே உன் தாகம் தீர்த்தாயோ!
எழுத்தாக்கம்
ஈழம் வாகீசன்.