களம் கண்ட காலமும் களம் கடந்த காலமும்… 2

In சிறப்பு கட்டுரைகள்

களம் கண்ட காலமும் களம் கடந்த காலமும்…!

களம் கண்ட காலம்
பகுதி -இரண்டு

அடிக்கு மேல் அடி அடித்து அகிலமே விரட்டிய போதும் தமிழன் திருப்பி அடித்த தேசம் அது

இழப்புகள் எமக்கு புதியவை இல்லை என்பதால் இறப்பினை கூட சிரிப்புடன் ஏற்ற இனம்

சமத்துவம் சமாதானம் எனும் உலக நளினங்களுக்கு இடையில் விடுதலையை மட்டுமே வேண்டிய ஈழம்

பொய்மைக்கும் போலிக்கும் அடி பணியாது புகழ் பெற வேண்டியே யாகம் செய்த பூமி

தேசத்தை வரையறுக்கும் வல்லமை இருந்தது அன்று எம்மிடம்

புயலை கடக்கும் வேகம் இருந்தது எங்கள் பூகம்ப தேசத்திடம்

ஆயிரம் கரம் கொண்டு அடித்த போதும் எமை அள்ளி அணைக்க ஒரு கரம் இருந்தது

அரசியல் பொருளாதாரம் நீர்ப் பாசனம் காவல் என்று அனைத்து கட்டமைப்பும் நேர்த்தியை கொண்டு இருந்தது

லஞ்சம் ஊழல் எனும் சொல்லின் அர்த்தமே தெரியாது அவதிப்பட்டவர்கள் நாங்கள்

மது மாது சூது எனும் சூட்சும இயந்திரங்கள்
இயங்கு நிலை மறுத்து இருந்த காலப்பகுதி அது

இயற்கை கூட எம்மிடம் கோபப்பட தயக்கம் கொண்டு இனிமைகள் கண்ட காலம்.

எமக்கான தேசத்தை எமக்கான வரையறுப்புக்களை எம்மவர்களே வகுத்து கொண்டனர்

சட்டம் என்பது ஆள்பவனுக்கும் ஒன்று அடிமட்ட சாமானியனுக்கும் ஒன்றாகவே இருந்தது

இளையவர் கோபம் எல்லாம் ஒன்றாக திரட்டி தேசத்தின் விடுதலை என்றானது

அதனால் வாள் வெட்டும் வக்கிர மொழிகளும் தடுக்கப்பட்டது

விடுதலை பயண பாதையில் வெற்றிகளை மட்டுமே கண்டு எங்கள் வலிகள் கொஞ்சம் கொஞ்சமாய் நிமிர்ந்து கொண்ட காலம் அது.

…மேலும் வளரும் என் அனுபவத்து வலியும் வார்த்தைகளும்…..

…………கவிப்புயல் சரண்……….

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.