எம் மொழி என்றும் வாழும்….!
ஏழ் கடல் தன்னை என்றும் எட்டியே
துளைத்து கொள்ளும் ஆழவாய்
புதைந்து நாளும் மாளாது எங்கள்
தமிழ் வீழ்ச்சியில் எழுச்சி கொண்டுவேகமாய்
தாகம் கொள்ளும்சோகமாய் சொல்லிச் செல்லசோராது
எங்கள் தமிழ் வாழ்விலே வெற்றி கொண்டுவசந்தமாய்
மாற்றம் கொள்ளும்யாசகத் தீயை வென்றுவாசமாய்
எங்கள் தமிழ் பிறமொழிக் கலப்பில் எல்லாம்பிறழ்வுகள் வருவதில்லை
அறமொழிக் கொள்கை காண அமுதமாய்
எங்கள் தமிழ் வேலோடு வாளும் கொண்டவெற்றிகள் தோற்பதில்லை
நீரொடு நிலமும் வாழ நிமிர்வுடன் எங்கள்
தமிழ் இனிவரும் காலம் எல்லாம்இளமையில் வேகம் கொள்ளும்
பழமையின் ஆழம் தன்னில் பசுமையாய் எங்கள்
தமிழ் வீழ்ச்சிகள் கண்ட போரில்ஆட்சியில் ஏறிக் கொள்ளும்
ஆழவாய் காதல் கொண்டவீரமே எந்தன் தமிழ்
..கவிப்புயல் சரண்..