சிந்தனை மகிழுதடா …..
யார் சொல்லித் தந்தாரடா உன் பிஞ்சு மனதிற்கு …..
எங்கள் உயிரானவருக்கான தீபத்தை …
உயிரேற்றி உவகை கொள்கிறாய் ….
ஈழ மண்ணின் உணர்வாளன் நீயோடா …
கார்த்திகை மாதம் கல்லறை நாயகர் …
துயிலிடம் மலர உன் சின்னஞ் சிறு …
பாதங்களையும் மனம் மகிழ்ந்து பதித்தாயா..
புலி ஆளும் ஈழ மண்ணில் …
தமிழ் உணர்வாய் பிறந்தவனே ….
உன் உணர்வுகள் எனை கட்டி இழுக்குதடா ..
மெய் சிலிர்த்து மனமெல்லாம் …
எங்கள் மாவீரரைப் பாடுதடா ….
உணர்வுகள் உனைப் போல் ….
தானாய் வருவதடா ….
உறங்கும் மாவீரர் ….
மனங்களுக்கு தெரியுமடா…
எழுந்திடுவோம் கார்த்திகையில் ….
எமக்காய் விழி மூடியவருக்காய் …
தொழுதிடுவோம் எந்நாளும்…
மாவீரர் புகழ் நிலைத்திடவே …
உள்ளத்து மாவீர உணர்வுகளோடு …