ஈழத்து  விதவைத் தாய்..!

In சிறப்பு கட்டுரைகள்

ஈழத்து  விதவைத் தாய்..!

ஏளனம் செய்யாதீர்கள்..

அவர்கள் சபிக்கபட்டவர்கள்
அல்லர்!
சரணடையாமல்
சண்டையிட்ட மாவீரத்தின்
சாட்சியங்கள்..

உயிரை கொடுத்து எதிரியை உருக்குலைந்தவனின் தாரமவள்,
அவளை எள்ளிநகையாடாதீர்கள்..

மனித பிறவிகள் என்றவகையில்
உங்களைப்போலத்தான்
அவர்களும் அவர்களை
அலட்சியம் செய்யாதீர்கள்..

தடுப்பில்  நின்று வந்ததால்
அவள் தரங்கெட்டவள் அல்ல!
அவளை தரங்கெட்ட வார்த்தைகளால் தாழ்த்தி பேசாதீர்கள்…….

தடுப்பில் நின்று வந்தனிதானே
உனக்கு இந்த மாப்பிள்ளை காணும்
என்னும் உங்கள் வரையறையை தூக்கி குப்பையில் எறி(ரி)யுங்கள்..

அவர்களின் இந்தநிலை(இழிநிலை)
உங்களுக்காகதான் …
உங்கள் சுதந்திர வாழ்வுக்காகத்தான் என்பதை மறவாதீர்கள்..

காணாமல் போன கணவனை தேடிலைகிறாள் …..
அவளை காமத்திற்கு அலைபவளாக சித்தரிக்காதீர்கள்!

வெளிநாட்டு காசில் வியர் குடித்துவிட்டு வீதியோரம் கிடக்கும் ஊதாரி கணவனை கட்டியவள் அல்ல அவள்..

தம்மை அழிக்கவந்த எதிரியை அழிக்க தன்னுயிரை கொடையாக கொடுத்தனுக்கு வாழ்க்கைப்பட்டவள் அவள்..

படலை திறக்க பயந்தவனுக்கு பாய்விரித்தவள் அல்ல அவள்…
கடலை கடந்தும் இலக்கை வீழ்த்திய கணவனை கரம்கோர்த்தவள்..

அவர்கள் இருக்கும்போது இப்படியில்லையே,
அவர்கள் இருக்கும்போது
இப்படி நடக்கவில்லையே,என்று முணுமுணுக்கும் உந்த வாயால் எப்படி வசைபாட முடிகிறது..

முதலும் போராடினாள் எதிரியோடு,
இப்பவும் போராடுகின்றாள் வாழ்க்கையோடு
அவளை வாழவிடுங்கள்…..

தன்மானத்தோடும்
தலைவர் தந்ததுணிவோடும்
பெற்ற பிள்ளைகளுக்காவது
வாழவேண்டுமென்று எண்ணுகின்றாள் அவளை வாழவிடுங்கள்..

அத்தனையும்  நாட்டுக்காக இழந்து
நிர்க்கதியாய் நிற்கின்றாள்
அவளை வாழ்த்தவில்லை
என்றாலும் வசைபாடாதீர்கள்..

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.


பிரபாசெழியன்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.