இன வலியை மறக்காது இளையவர்க்குகொடுப்போம்….!

In தாயக கவிதைகள்

இன வலியை மறக்காது இளையவர்க்கு
கொடுப்போம்
******************************************
தானைத் தலைவனின் நெற்றிப் பொறியிலே நெருப்பெனப் பிறந்தவர்கள்
தாயின் முலைதனில் ஊறும் பாலிலும்
விடுதலை வீரம் குடித்தவர்கள்

ஊரும் தெரிந்திட ஊறும் விடியலின்
உருவாய் சிரித்தவர்கள் -இவர்
யாரும் அறிந்திடா யாகத் தீயிலே
தம் தேகம் எரித்தவர்கள்

ஆலம் சுமந்தவன் ஆடும் சிவன் கூட
இவன் வேரைத் தெரிந்ததில்லை -பல
வேழம் நிகர்த்தவன் வேங்கைதலைமகன்
விழி நீரைச் சொரிந்ததில்லை

ஈழம் அழிந்ததை மெல்ல மறந்தது
பொங்கும் பெரும் நிலமே -அட
கோலம் இழந்தது கொள்கை பறந்தது
போதையில் நம் இனமே

யாகத் துடிப்பிலே வேகம் ஒரு போதும்
தேசம் படைக்கவில்லை -எம்
சோகத் தடங்களை மீட்டித் தருவது
விழி நீரைத் துடைக்கவில்லை

இனக் கோபம் கடத்திடும் தேவை இருப்பதால் தாகம் அடங்கவில்லை -அட
சாகப் பயந்திடும் சந்ததி வாழ்வதே
இன்று ஆகப் பெரும் கவலை

ஆகச் சிறந்தவர் ஆளப் பிறந்தவர்
அறிவைப் பெருக்கிடுவோம்-எம்
தாகக் கனவினை ஈழக் குழந்தைகள்
உடல் சேரக் கொடுத்திடுவோம்

நன்றே தலைமுறை நம் நிலம் ஆண்டிட
நமை நாமே எரித்து கொள்வோம்
இன்றே கடத்துவோம் இனிய தமிழ் பெயர்
இப்போதே சூட்டிக் கொள்வோம்.

……கவிப்புயல் சரண்…..

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.