ஆழிப்பேரலை
அலைகடல் எழுந்து ஆர்பரித்து
அதிகாலை வேளை தரை வந்தது
பேரலையாக கோரமும் கொண்டது
கொடூரமாக கொலையும் கொண்டது
கணநேரத்தில் கண்முன்னே வந்தது
அமைதி வேளையில் வேகம் கொண்டது
எம் உறவுகளை கண்முன்னே கொன்றது
எண்ணற்ற உயிர்களை குடித்து சென்றது
ஆழியின் பேரலையாக தாண்டவமாடியது
அடங்காமல் ஆதிக்கமும் கொண்டது
பிஞ்சுகளை உள்ளே இழுத்து சென்றது
தன் கோரப்பசிக்கு உயிரைப் பறித்தது
தேசக் கனவையும் கலைக்கவே வந்தது
சுனாமி வழியில் பேரினவாதம் புரிந்தது
தமிழர் உயிர்களை வாசமும் கொண்டது
நீரில் மூழ்கியே எம் தேசமும் இருண்டது
யாரும் நம்பாமலே கடலும் ஊரும் வந்தது
சின்னாபின்னமாகவே சிதைத்தே மீண்டது
உலுப்பியே மண்ணையும் புரட்டி போனது
சீறிய பேரலையால் எம் சிரமும் தாழ்ந்தது