வேட்கை என்பது
எமக்கு எப்படி என்றால்…….
நீர் இன்றிய வனத்தில்
ஓடிக் கொண்டு இருக்கும்
மானின் தாகம்
வெள்ளம் ஓடும் போது
வேரின் தாங்கலில் ஊசலாடும்
மரத்தின் பிடிமானம்
கன்றினை இழந்த
தாய் பசுவின்
பாசக் கதறல்
தாய்ப் பசுவின் குரல்
கேட்டும் திசை அறியா
கன்றின் ஏக்கம்
பள்ளம் நோக்கி
பாய்ந்து கொண்டு இருக்கும்
வெள்ளத்தின் வேகம்
ஆனால்
வேட்கை என்பது சிங்களத்துக்கு இப்படி தான்
கைகளை கட்டிய பின்
முட்டி போட்டு சுடுபவன்
மன நிலை
கற்பினை பெற்றவர் முன்
பறிக்கும் பேடிகளின்
எண்ணம்
சிறு மொட்டுக்களின்
வலி தெரியாதவர்களின்
மௌனம்
காசுக்கும் கலவிக்கும்
கரைந்து கொண்டு இருக்கும்
நீதி
வெற்றிக்கும் வெறிக்கும்
வித்தியாசம் தெரியாத
விலங்கினம்..
பத்து முதல் நூறு
வரை பறிக்கப்படும்
கற்பு …..
…கவிப்புயல் சரண்..