விடுதலை பாதைக்கு இசையால்
வித்திட்ட இசை வீரனே ………!!!!
ஈழ விடுதலை உணர்வுகளை
உன் பாட்டாலே எமக்களித்தாய் ….!!
காலத்தின் உணர்வுக் குரலாய் – எங்கள்
மனங்களிலே இடம்பிடித்து – எம்
தேசத்தின் ஈழக் குயிலானாய்…..!!!!
எத்தனை எத்தனை விடுதலை கீதங்கள்
அண்ணா உன் ஈழபயணத்திலே…..!!!!
கண்கள் இமைக்க மறந்தாலும்
கண்ணீர் கரைந்தோடுகின்றது அண்ணா
உன் இழப்பை தாங்க முடியாது
மனமோ குமுறி அழுகின்றது அண்ணா
இன்னும் ஓரிரு பாடல்கள் ஈழத்திற்காக
உன் குரலில் ஓங்கி ஒலிக்காதா …,??
மனம் இங்கு ஏங்குதண்ணா .……!!!
நீ பாடிய பாடல்களாலே இன்றும் என்றும்
எம்முள் உயிரோடு நீ வாழ்வாய் அண்ணா
மனதின் வலிகளோடு.………!!
எஸ்.றதன் கார்த்திகா.
என்றும் மாறாத மறக்கமுடியாத நினைவலைகளாய் எம்முள் வாழ்கிறாய் அண்ணா இசையோடு…..
சாந்தன் அண்ணா