லெப். கேணல் பகலவன்…!
1989ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து எமது தாயகத்தின் விடுதலைக்காக ஆரம்பத்தில் யாழ்மாவட்ட தாக்குதல் படையனியிலும் பின்பு சாள்ஸ் அன்ரனி படையனியிலும் பல தாக்குதல்களில் பங்குபற்றிய இவர் 1993ம் ஆண்டு கடற்புலிகள் படையணியில் இணைந்து முதன்மை கனரக ஆயுத சூட்டாளராகவும் எமது சண்டைப்படகுகளின் பிரதான ஆயுதங்களின் சிறந்த சூட்டாளராக பல கடற்சமர்களில் பங்குபற்றி பின்னர்.
படகுக்கட்டளை அதிகாரியாகவும்,பின் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் ,பனியாற்றியபோது இவரின் திறமையைக்கண்டு ஆழ்கடல் விநியோக கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டார். கடலில் நடைபெற்ற அதிகளவான அதாவது ஏறத்தாழ165க்கு மேற்பட்ட கடற்சமர்களிலும் ஆழ்கடல் விநியோகத்திலும் அதிகளவு பங்குபற்றிய பெருமை இவருக்குண்டு.சமாதான காலப்பகுதியில் மன்னார் மாவட்ட கடற்புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்டு இயக்கத்திற்கு பலம் சேர்க்கும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
இறுதி யுத்தம் ஆரம்பமான போது மன்னார் பூநகரி கடல்நடவடிக்கைள்,கடற்சமர்கள், ஈரூடகதாக்குதல்கள் என அணைத்தையும் வழிநடத்தி இறுதிவரை கடுமையாக போராடி 4.2.2009 அன்று பேப்பாறைப்பிட்டிப் பகுதியில் சிங்களப்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது லெப். கேணல் பகலவன். அவர்கள் தான் நேசித்த தாய்மண்ணை முத்தமிட்டு வீரச்சாவை தழுவிக்ககொண்டார்.