யாகமே செய்வோம் நீ வா
****************************
விரிந்திடும் உலகில் விடுதலைப் படையை
வீண் பழி சொல்லியே கொல்வான்-அட
எரிந்திடும் தீயை அழித்திடப் பகைவன்
ஆயிரம் பொய்கள் சொல்வான்
தீமையை ஓட்டத் தீவிரம் காட்டில்
தீவிரவாதம் என்பான் -அட
அவன் எமைத் தாக்கில் பொங்கி எழுந்தால் போரியல் தூண்டல் என்பான்
போர் வெறி என்பதைப் பகைவனே அறியப் போரிட வேண்டும் வா வா
நேர் வழி செல்லும் ஆயுதப் படையை
நேர்த்தியாய் அமைத்தாய் தலைவா
கூர் முனை மழுங்கா வேலினைக்
கொண்ட வெற்றியை தந்தாய் நீ வா
யார் துணை இன்றியும் யாகத்தை வளர்த்து வீரமே தந்தாய் தலைவா
வெல்ல ஓர் வழி வேங்கை என்பதே
நம் நிலம் கண்ட உண்மை
மெல்லப் படை தனை மீண்டும்
சமைத்திடில் ஈழம் என்பதே மேன்மை