சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள்.

In வெற்றி தாக்குதல்கள்

சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள்

குறுகிய கால இடைவெளிக்குள் மூன்று வான் தாக்குதல்க்களை வான் புலிகள் நிகழ்த்தியுள்ள்ளனர். இராணுவ மற்றும் பொருண்மிய இலக்குகளே வான் புலிகளின் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன. கட்டுநாயக்கா வான் தளமும், பலாலிப் பெருந்தளமும் சிங்க்களத்த்தின் அதியுச்ச இராணுவ இலக்குகளாகும். இவை இரண்டும் அடுத்தடுத்து வெற்றிகரமாகத் தாக்கப்பட்டுள்ளன.

கொழும்பு எரிபொருள் சேமிப்புக் குதங்கள் மீதான வான் தாக்குதல்கள் சிங்களத்திற்கு பொருண்மிய நெருக்கடிகளை உண்டு பண்ணியுள்ளன. சிங்களத்தின் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தமிழர்க்கெதிரான ஆக்கிரமிப்புப் போரின் அரசியல்,  இராணுவ மற்றும் கட்டளை மையமான கொழும்புநகர் வான் புலிகளின் குண்டு வீச்சுக்களுடன் குழம்பிப்போயுள்ளது. பதட்டமும், பீதியும் நிறைந்த இடமாகச் சிங்களத்தின் மையபீடம் உருமாறியுள்ளது.

தமிழர் மீதான வான் தாக்குதல்களின் கோரத்தையும் அது தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ள பீதியையும் சிங்கள தேசமும் அனுபவிக்கும் சூழல் பிறந்துள்ளது.

தமிழரின் விடுதலையை வென்றெடுப்பதற்காக முப்படையின் அவசியத்தைத் தலைவர் பிரபாகரன் அடிக்கடி எடுத்துரைப்பார். தரைப்படை, கடற்படை, வான்படை என்ற அந்த முப்படையையும் இன்று அவர் உருவாக்கி அவற்றை வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றார். ஒவ்வொரு படைக்கட்டுமானத்தையும் நன்கு திட்டமிட்டு, கட்டியமைத்து, சரியான நேரத்தில் அவற்றை வெளிப்படுத்திக்காட்டும் தலைவரின் அற்புதமான தலைமைத்துவச் செயற்பாட்டை இன்று உலகமே வியந்து பாராட்டிவருகின்றது.

கிழக்கு நிலத்தைக் கைப்பற்றி, வடக்கில் ஒரு படைய நெருக்கடியைப் புலிகள் இயக்கத்திற்குக் கொடுத்துவருவதாகச் சிங்கள அரசு செய்த பரப்புரையை மூன்று வான் தாக்குதல்கள் மூலம் தகர்த்தெறிந்துள்ள தலைவர் அவர்கள், தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பாய்ச்சல் வளர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

புலிகளிடமுள்ளது இலகுரக, மிதவேக விமானங்கள். தம்மிடமுள்ளது சக்திவாய்ந்த, அதிவேகக் குண்டுவீச்சு விமானங்கள். உயர் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆயுதங்கள் என்றெல்லாம் சிங்கள அரசு பெருமைபேசி வந்தது.

ஆயினும், அதிவேகங்களையும்,  உயர் தொழில்நுட்பங்களையும் வான் புலிகளின்  திறமையும், சாதுரியமும், அர்ப்பண உணர்வும் முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளன என்பதே உண்மையாகும்.

ஒரு போரில் நவீன ஆயுதங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன என்பது சரிதான்.

ஆயினும், ஆக்கிரமிப்பிற் கெதிரான விடுதலைப் போராட்டங்களில் நவீன ஆயுதங்கள் முதன்மைப் பாத்திரத்தை வகிக்கவில்லை.

ஏனெனில் ஆக்கிரமிப்புப் போரும், விடுதலைப் போரும் பண்புரீதியாக வேறுபாடானவை.

ஆக்கிரமிப்புப் போர் பண்பின் அம்சங்களாக நவீன ஆயுதங்களும், ஆளணிப் பலமும் – பொருண்மிய பலமும் முக்கிய விடயங்களாக இருக்கும்.

ஆனால், விடுதலைப் போர் பண்பின் முதன்மை அடையாளங்களாக இலட்சியப் பற்றும் – மன உறுதியும், அர்ப்பண உணர்வுமே விளங்கும்.

அதனால்தான் நவீன தொழில்நுட்பங்களையும், சக்தி வாய்ந்த அழிவாயுதங்களையும் விடுதலை வேட்கை கொண்ட போராளிகளால் வெற்றி கொள்ள முடிகின்றது.

வான் புலிகளும் அவ்வாறு தான் ஆழமான விடுதலைப் பற்றின் உந்தலால் சிறப்பான வகையில் செயல்வீரத்தை வெளிப்படுத்தி – துல்லியமான தாக்குதல்களைத் துணிகரமாக நிகழ்த்தித் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் புது மெருகூட்டியுள்ளனர்.

தமிழருக்கு வான்படை என்ற தலைவர் பிரபாகரனின் கனவும் – அதை நனவாக்க அவர் எடுத்த பல வருட முயற்சிகளும் இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளன.

வரலாற்றில் முதற்தடவையாகத் தமிழினம் ஒரு வான்படையை இப்போது கொண்டுள்ளது. தரை எல்லை, கடல் எல்லை தமிழருக்கிருப்பதுபோல இப்போது வான் ஆதிக்கமும் தமிழருக்குக் கிடைத்துள்ளது.

தமிழரின் வான் பரப்பில் சிங்கள வான்படை இதுவரை காலமும் வைத்திருந்த வான் ஏகபோகம் இப்போது உடைத்தெறியப்பட்டுள்ளது.

வான் புலிகளின் அடுத்த குண்டுவீச்சு எங்கே எப்போது என்று கேள்விமேல் கேள்விகேட்டு சிங்கள தேசம் அச்சமடைகின்றது.

புலிகளின் வான்தாக்குதலைத் தடுக்கும் நோக்குடன் பல்லாயிரம் கோடி ரூபா செலவு செய்து விமானங்களையும், இராணுவ தளபாடங்களையும் வாங்கச் சிங்கள அரசு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே போர்ச்செலவால் நசுங்கிப் போயுள்ள சிங்கள அரசுக்கு இது மேன்மேலும் பொருண்மிய நெருக்கடிகளை உண்டு பண்ணப்போகின்றது.

மொத்தத்தில், வான் புலிகளின் விமானத் தாக்குதல்கள் சிங்கள தேசத்தையும் அச்சத்திற்குள்ளாக்கி, சிங்களத்தின் பொருண்மியத்தையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

விடுதலைப்புலிகள் (பங்குனி, சித்திரை 2007) இதழிலிருந்து ஈழப்பறவைகள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.