அறத்தை எண்ணி மறத்தை
காத்த ஈழக் கதவின் திறப்பு
அடைத்த கதவை உடைக்க
வந்த அடுத்த சோழப் பிறப்பு
தடுத்த பகையை விரட்டிக்
களப் போர் தொடுத்த நெருப்பு
சிறுத்தை தன்னை வளர்த்து
சிங்கத் திமிரைச் சரித்த விளக்கு
எட்டும் தமிழை குட்டும் பகையை
விட்டுக் கலைத்த வேழம்
கொட்டும் மழையை கொடிய நெருப்பை
முட்டித் தகர்த்த ஞாலம்
செயலைத் தொடுத்து வில்லை விடுத்து
கொல்லப் பறந்த போர் வாள்
அள்ளிப் பகையைத் தள்ளிக் குவித்து
துள்ளித் திரிந்த தேர்க் கால்
வாடித் தமிழன் வீழும் நிலத்தை
ஆளப் பிறந்த வேழம்
ஓடிப் பறக்கும் காலம் நகர்த்தி
கூடித் தகர்த்த ஞாலம்
வெல்லக் களத்தே வில்லை விடுத்து
கொல்லப் பறந்த போர் வாள்
சொல்லை விடுத்து செயலைத்
தொடுத்து எல்லை கடந்த நாற்று
பீடை அழித்த தமிழன் களத்தில்
சுழன்ற சூறைக் காற்று
கேடு படைத்த சிங்களக் குப்பைக்
கிடங்கை எரித்த நெருப்பு
நாடு படைக்க ஈழக் குறியை
நாடிப்பறந்த ஊர்தி
வாடித் தமிழன் வீழும் நிலையில்
வரமாய் வந்த மழை நீர்
ஓடிக் கவலை நிறைத்த நிலையில்
தேடித் திரிந்த பெருந் தேர்
தேடித் திரிந்தும் முடிவில் காணா
முழுமை படைத்த முன்னோன்
வெல்லும் நிலைக்கு வந்த பின்னே
வீழ்ந்து வெந்த ஈழம்
ஆளும் இனத்தில் வாழத்
தமிழன் காக்க வந்த சுற்றம்
நீளும் போரில் மீளும் பகைக்கு
நேராய் தெரிந்த கூற்றம்
கொல்லும் படைக்கு சொல்லும் சேதி
கொடியார்க்கு இல்லை காலம்…
இது நிலையே இல்லாக் கோலம்
விலையே போகாத் தீரம்
விழுந்து கொள்ளா வீரம்
எழுந்து நிற்கும் நாளும்……..
…கவிப்புயல் சரண்.