கொடி ஏறி வான் நின்று ஆடும்
கடல் காடு வானம்
கலி நீங்க மண்ணில்
கந்தகம் தனை ஏந்தி போவோம்
இனம் தமிழ் தலைமுறை
இயல்பாகி வாழ
உடல் வற்றி கருவாடாய் சாவோம்
இடர் தன்னை ஏற்று
இழிவாகி வாழ
இனிமேலும் பணியாது எழுவோம்
சுடர் தன்னை ஏற்றிச்
சுழல்கின்ற தீயில்
மாவீரம் மனதேற்றித் தொழுவோம்
உடல் வெந்து நீறி
உலை தன்னில் வீழ்ந்தும்
உணர்வின்றி இனி மேலும் சாகோம்
திடம் கொண்ட தோளில்
திமிர் தன்னை ஏற்றித்
தினவோடு களம் காணப் போவோம்
நிலை மாறும் உலகென்று
நிமிர்வோடு உனை நம்பி
நிச்சயம் நிலை குலைந்து போனோம்
விலை போகாத் திறம் கொண்டு
வீரியம் தனை வென்று
வீண் மீது கொடி ஏற்றி ஆவோம்
மண் எங்கள் மகிழ்வென்று
மனம் வந்து கதை சொல்லும்
மாவீரம் காற்றோடா போகும்
விண் தாவும் தமிழர் நிலம்
விரைந்தே தன் விடுதலையை
விலக்கியா வீழ்ந்திங்கு சாகும்…
வருங்காலம் அறிந்து விட
வரலாறு தனைச் சேர்த்து
வல்லமையை வானுயரச் செய்வோம்
எம் தாகம் தனைக் கடத்தும்
ஊடகமாய் நாம் மாறி
உளமார ஆவி தனை உய்வோம்
…கவிப்புயல் சரண்…..