எழுந்திடு மண்ணில் புலிகளாய் மீண்டும்…!
களங்கள் குருதி படக்
கருவிகள் செய்வோம்
நிலங்கள் அதிர மண்ணில்
களங்கள் அமைப்போம்
வளங்கள் பெருகும் வண்ணம்
எண்ணிக் கருமம் முடிப்போம்
துட்டரை துடைக்க மண்ணில்
துடைப்பம் உதவாது
துப்பாக்கி தனை என்னில்
துயரேதும் நீளாது
விற்போரும் மற்போரும்
வித்தைகள் ஆகாது
வீரத்தின் கலைகள்
வீழ்வதும் கூடாது
தம்பியும் தங்கையும்
ஒன்றாய் எழுந்த பின்
தடைகள் மண்ணிலே
தக்ர்ந்துமே போகும்
புலிகள் மண்ணிலே
எலிகள் வந்ததால்
புழுக்கள் தினமும்
புகுந்து கொண்டது
வெளிகள் என்பது
வேடிக்கை ஆனதால்
துளிகள் கண்ணில்
நிறைத்துக் கொண்டது
எழுந்திடு மண்ணில்
புலிகளாய் மீண்டும்
போரியல் மாற்றிப்
புறப்படு தோழா
விழிகள் எல்லாம்
நெருப்பென ஆக்கி
வலிகளை நீக்கி
புறப்படு தோழி
உரிமையும் உனது
உடலும் உனது
உயிரும் உனது
உலகும் உனது
வெற்றியும் மரணமும்
புலிகளுக்கொன்று
விடுதலை மட்டுமே
புலி விடும் அம்பு
பகை நொடி வாசலை
கருக்கவே போகும்
புலியணி தன்னில்
புறப்படு நீயும்
வெளிப்படும் வீரம்
யாவையும் திரட்டி
புறப்படு நீயும்
புலியென மாறி
ஒன்றாகி நில்லு
ஒரு போதும் அழிவில்லை
ஒளியேற்றத் திரளு
விடிவே நம் எல்லை
…..கவிப்புயல் சரண்…..