அண்ணை நம்பிய புலம் பெயர் தமிழர்கள்….!

In சிறப்பு கட்டுரைகள்

அண்ணை நம்பிய புலம் பெயர் தமிழர்கள்….!

தமிழர்களின் அடுத்த பலம்
எங்கள் மூன்றாம் கை

உண்மையில் ஈழம் வலி சுமக்கும் வேளைகளில் எல்லாம் முன் நின்று வலி போக்கும் மருந்தும் மருத்துவர்களும் எங்கள் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை .

இடர் மிகு காலத்தில் எம்மோடு இணைந்து நிற்கும் மூன்றாம் கைகள் அவர்கள்

சிங்கள அரசும் ஆதிக்க நாடுகளும் இன்றுவரை பயந்து நிற்கும் தலைவன் வளர்த்த உறங்காத புலிகள் அவர்கள்

பஞ்சம் பசி பட்டினி தொடங்கி வெள்ளம் புயல் சுனாமி என்று இன்று கொள்ளை கொள்ளும் கொரோனா வரை
ஈழத்தமிழரை அழிவில் இருந்து உயர்த்தி வைத்தவர்கள் இவர்கள் மட்டுமே

அரசு இயந்திரம் வைத்த அத்தனை பொறியியல் சூழ்ச்சிகளையும் உடைத்த எறிந்த உத்தம புருஷர்கள் அவர்கள் .

சிங்கள பயங்கரவாதம் ஈழத் தமிழரை இப்படியே மடக்கி அவர்களை அடிமையாக வைத்திருக்கலாம் .
அவர்கள் கைகளில் எதுவும் இல்லை நாங்கள் அவர்களது இந்த இயலாமையை
பயன்படுத்தி சில இயங்கு திட்டங்களை தீட்டி
அவர்கள் மனதில் உள் நுழைந்து கொள்ளலாம் என கனவு கோட்டை கட்டிக் கொண்டுள்ளது ..

அந்த கனவுக் கோட்டை தகர்த்த கரும்புலிகள் எங்கள் புலம் பெயர் சொந்தங்கள் .
அவர்களில் ஈழத்தமிழர்கள் மட்டும் அல்ல
இந்திய சொந்தங்களும் உள்ளடக்கம் .

அரச பயங்கரவாதத்தின் செயல்களை முறியடிக்கும் முன்னணி போராளிகள் நீங்கள் .

களத்தில் இப்போது நாங்கள்
தளத்தில் எப்போதும் நீங்கள்

இந்த கோட்பாடு தான் எம்மை இயங்க வைக்கும் இயக்க சக்தி…

மீண்டும் மீண்டும் அடக்குமுறை உடைக்கும்
அர்ஜுனன் அம்புகள் நீங்கள்

உங்களுக்கு ஈழம் தலைவணங்கி நிற்கிறது
எப்போதும் கை கொடுங்கள்
இனம் வாழத்துடிக்கும் உயிர்ப்பின் துகள்கள் நீங்கள் .

அத்தனை வேங்கைகளுக்கும்
ஈழம் சார்பில் நன்றிகள் ..

நாங்கள் மீண்டும் மீண்டும் உயிர்ப்பு கொள்ள ஈழத்து மக்கள் அவசியம்
அதே போல் அவர்கள் உயிர்ப்பு கொள்ள
எங்கள் உறவுகள் நீங்கள் அவசியம்

எம் வீரப்பச்சையம் ஒரு போதும் அழியாது அது மீண்டும் மீண்டும் துளிர்க்கும் .

அத்தனை பேருக்கும் மாவீரம் துணை இருக்கும்
இனிய வாழ்த்துகளும் நன்றிகளும் ..

…கவிப்புயல் சரண்…..

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.