அண்ணனின் எண்ணத்தில் உருவான அக்கினி மறவர்கள் …!!
அண்ணனின் எண்ணத்தில் உருவான அக்கினி மறவர்கள் …!!
கரும்புலியாய் உருவெடுக்க
தாயின் கருவறையில் பிறப்பெடுத்தவர்கள் …..!
ஊரறியா இவர் முகங்கள் ….
உயிராயுதத்தால் நிமிர்ந்து நிற்கும்….
மென்மை கலந்த பார்வையிலே ஓராயிரம் கனவிருக்கும் …..
சிந்தாத சிறு புன்னகைக்குள் நூறாயிரம் அர்த்தங்களும்
புதைந்து கொள்ளும் ….!!
சேயின் மனமறியும் தாயை போல …….
தாய் நாட்டின் தேவை அறிந்து விரைந்தவர்கள் கரியபுலிகள் ……
கந்தக வெடிகளை ஆடைகளாய் சுமந்து
சாவுக்குத் தேதி குறித்து
புன்னகை தவழும் முகத்தோடு கை அசைத்து வீரத்தோடு இவர்கள் விடைபெறும் நொடிப்பொழுதுகள்……
மழை பொழியும் நேரத்தில் இடி விழுந்து நொருங்கும் மனம்போல் சுக்குநூறாய் சிதறிப்போகும் ….
வெடி ஓசை வானைப்பிளக்க ….
எதிரி படையை சிதறடித்த வெற்றிச் செய்தி எம் காதுகளை தொடும் வேளை ……
வீரத்தால் தலை நிமிர்ந்து
அவர்கள் நடந்த தடங்களில் எங்கள் கால்களும் பயணிக்கத் துடிக்கும் ….. !!!!
ஓர் கரும்புலி வீரனின் சாவில்
இன்னொர் கரும்புலி வீரன் பிறப்பெடுப்பான் ..
கரிய புலிகளின் நினைவுகளோடு…
எஸ் . றதன் கார்த்திகா