தமிழீழம் கிட்டும்வரை விடுதலைப் போராட்டம் தொடரும்…!!!

In தமிழீழத் தேசியத்தலைவர்

தமிழீழம் கிட்டும்வரை விடுதலைப் போராட்டம் தொடரும்…!!!

எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் அளப்பரிய தியாகங்களைச் செய்கின்றோம். தாங்கமுடியாத துன்ப, துயரங்களை அனுபவித்திருக்கொன்றோம். ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பரிகொடுத்திருக்கின்றோம். பெரும்தொகையான இளம் போராளிகளை களத்தில் பலி கொடுத்திருக்கின்றோம். சகிக்க முடியாத அளவிற்கு நாம் அவமானப்பட்டிருக்கின்றோம். இழிமைப் படுத்தப்பட்டிருக்கின்றோம். சிங்களப் பயங்கரவாதமானது எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய்ழ் வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.

இத்தனை கொடுமைகளுக்குப் பின்னர் இத்தனை உயிரழிவுகள், பொருளழிவுகளுக்குப் பின்னர், இத்தனை மகத்தான தியகங்களுக்க்குப் பின்னர், இத்தனை வீரசாதனைகளுக்குப் பின்னர், நாம் சிங்கள அரசிடம் மண்டியிட்டு சலுகைகளுக்காக கைநீட்டப்போவதில்லை.

நாம் சுதந்திரமாகவும், கெளரவமாகவும் நிம்மதியாக சமாதானமாக வாழ்வதாயின் அது சுதந்திர தமிழீழத்தில்தான் சாத்தியமாகும். அந்த சுதந்திர தமிழீழம் கிட்டும்வரை எமது போராட்டம் தொடரும் என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

தர்மமும் உண்மையும் இறுதியில் வெற்றியளித்து தமிழ்த்தாயில் கருக்கொண்டுள்ள வரலாற்றுக் குழந்தையான தமிழீழம் என்றோ ஒரு நாள் பிரசவமெடுக்கும் என்பது எனது நம்பிக்கை.

எம்மிடம் ஆத்மபலமும் ஆயுதபலமும் இருக்கிறது. மக்கள் பலமும் எமது கரங்களைப் பலப்படுத்துமானால் எமது இலட்சியம் வெற்றியடைவதை யாராலும், எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை உறுதியுடன் கூற விரும்புகின்றேன்.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்…

(‘எனது மக்களின் விடுதலைக்காக’ என்ற நூலில் இருந்து)

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.